உள்ளூர் செய்திகள்

நல்ல நாள்

அதிகாலையில் நீராடி சூரிய உதயத்தின் போது கிழக்கு நோக்கி வணங்க வேண்டும். அப்போது நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டு கீழ்க்கண்ட துதியைச் சொல்லுங்கள். அந்த நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். * செயலை துாண்டுபவருக்கு வணக்கம்* போற்றுதலுக்குரியவருக்கு வணக்கம்* தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவருக்கு வணக்கம்* அமிழ்தமாக இருப்பவருக்கு வணக்கம்* உலகின் கண்ணாக இருப்பவருக்கு வணக்கம்* உலகுக்கு உயிராக இருப்பவருக்கு வணக்கம்* நண்பனாக இருப்பவருக்கு வணக்கம்* காலத்தை உண்டாக்குபவருக்கு வணக்கம்* பகலை உருவாக்குபவருக்கு வணக்கம்* ஒளியை உண்டாக்குபவருக்கு வணக்கம்* வானத்தில் சஞ்சரிப்பவருக்கு வணக்கம்* மாறுதலைச் செய்பவருக்கு வணக்கம்* பரமாத்மனுக்கு வணக்கம்* அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவருக்கு வணக்கம்* வெளிச்சமாக இருப்பவருக்கு வணக்கம்* அனைத்தையும் தன்னுள் அடக்கியவருக்கு வணக்கம்* அளப்பரிய ஒளியுடையவருக்கு வணக்கம்* கதிரை உடையவருக்கு வணக்கம்* கண்கண்ட தெய்வமாக இருப்பவருக்கு வணக்கம்* பத்துத் திக்குகளிலும் ஒளிவீசுபவருக்கு வணக்கம்* செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு வணக்கம்* பிரபையை உண்டு பண்ணுகிறவருக்கு வணக்கம்