உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ப.கிருஷ்ணா, குண்டுலுபேட், மைசூரு: சிவராத்திரிக்கு தொடர்புடைய தலங்கள்...காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம். ஆ.வைகுண்டன், வடசேரி, கன்னியாகுமரி: குலதெய்வ கோயிலில் வைத்த பொங்கலை வீட்டுக்கு எடுத்து வரலாமா...குடும்பத்தினர், உறவினருக்கு பிரசாதமாக எடுத்து வரலாம். சொ.மீனலோசனி, திருவேடகம், மதுரை: மாசி மாத ஏகாதசியின் சிறப்பு...ஆமலகீ ஏகாதசி' எனப்படும் இந்த நாளில் நெல்லிமரத்தடியில் மகாலட்சுமியை வைத்து பூஜை செய்தால் பணம் சேரும். சி.பாரதி, திர்லோக்புரி, டில்லி: சுவாமி படத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்?ஈசானம் (வடகிழக்கு) அல்லது கன்னி (தென்மேற்கு) பக்கத்தில் வைப்பது நல்லது.ப.வினிதா, செல்வபுரம், கோயம்புத்துார்: செம்பருத்தி பூவை தெய்வத்திற்கு சூட்டலாமா... சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு சூட்டலாம். ரா.மரகதம், பாலசமுத்திரம், திண்டுக்கல்: மந்திரம் சொல்ல 'ஓம்'க்கு பதிலாக 'ஸ்ரீ' யை சொல்லலாமா?மந்திரங்களை 'ஓம்' எனத் தொடங்குவதே சரியானது. கி.பூமிநாதன், வீரவநல்லுார், திருநெல்வேலி: ஜாதகத்தில் யோகதிசை நடப்பதை எப்படி அறிவது?அதிர்ஷ்டம் தானாக வந்தால் அப்போது நடப்பது யோகதிசை. ம.ராஜன், பள்ளிக்கரணை, சென்னை: மாசியில் திருமணம் நடத்தினால்...சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். யு.அமராவதி, சன்னியாசிகுப்பம், புதுச்சேரி: மனிதன் சம்பாதிக்க வேண்டியது எது?புண்ணியம். அடுத்த பிறவி, சந்ததி நன்றாக இருக்கும்.