உள்ளூர் செய்திகள்

யாருக்கு குபேர யோகம்

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லை என புலம்புகிறீர்களா... புலம்பல் தீர இதை பின்பற்றுங்கள். * பெற்றோர்களை வணங்குங்கள்* பெண்களை அழ விடாதீர்கள். * வீட்டை துாய்மையாக வையுங்கள். * வீண் பேச்சு பேசாதீர்கள்.* பணம் வைக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாதீர்கள்.* பணத்தை கையாளும் போது அவசரப்படாதீர்கள்.* பணத்தை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.* சில்லறைகளை சிதற விடாதீர்கள்.* ரூபாய் நோட்டை கசக்கவோ எழுதவோ வேண்டாம்.* ரூபாய் நோட்டை வரிசையாக அடுக்கி வையுங்கள்.* மணிபர்சை முன்பையில் வையுங்கள்.* பணம் சேமிக்கும் உண்டியலை அடிக்கடி எடுத்து குலுக்கி பார்க்காதீர்.* விருந்தினரை உபசரியுங்கள்* பணம் பற்றி பேசினால் முரணாக பேசாதீர். * ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது, 'என்னால் தான் இவனுக்கு வாழ்வு வந்தது' என ஆணவம் கொள்ளாதீர்கள்.* நேரம் பார்க்காமல் உதவி செய்யுங்கள்.* முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். * குருஹோரையில் பணத்தை புழங்குங்கள். (வியாழன் காலை 6:00 - 7:00, மதியம் 1:00 - 2:00, இரவு 8:00 - 9:00) பணம் கையை விட்டு போனாலும் திரும்ப உங்களிடமே வந்து விடும்.* கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, இடரினும் தளரினும்... போன்ற பதிகங்களை தினமும் கேளுங்கள்.* அம்பிகையின் சன்னதியில் உங்கள் பிரார்த்தனைகளை வாய்விட்டு சொல்லுங்கள். அவளின் கடைக்கண் பார்வை கிடைக்கும். * நீங்கள் அழைக்காமலே உங்க வீட்டுக்கு குபேரன் வந்து அருள்புரிவார்.* சுவாமி படத்தை துடைத்து பூ வையுங்கள்.* பீரோவை வடகிழக்கு திசை பார்த்து வையுங்கள்.