உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.ராஜேஸ்வரி, வையாவூர், காஞ்சிபுரம். * நிறைமாத கர்ப்பிணி கோயிலுக்கு செல்லலாமா?கோயிலுக்குச் செல்லலாம். அழகும், அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். ஆர்.கோபி, வாஸ்காஸ், டில்லி. * மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதன் பொருள் என்ன?மூர்த்தி - மூலவர், தலம் - தலவிருட்சம், தீர்த்தம் - தெப்பக்குளம். இந்த மூன்றும் ஒரு கோயிலுக்கு முக்கியம். வி.கண்ணம்மாள், வில்லுக்குறி, கன்னியாகுமரி.* அங்கப்பிரதட்சணம் - எப்படி தொடங்க வேண்டும்? வேண்டுதலைச் சொல்லி சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சன்னதியை வலம் வந்து கொடிமரத்தில் விழுந்து வணங்கி, நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டும். பி.ராணி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.* புத்திர தோஷம் தீர என்ன செய்யலாம்?தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்து அதற்கான பரிகாரத்தை செய்யுங்கள்.கே.பிரேமா, மடிக்கேரி, மைசூரு.* கிழக்கு பார்த்த மூலவரை வடக்கு நோக்கியும், மேற்கு பார்த்த மூலவரை தெற்கு நோக்கியும் வழிபடச் சொல்வது ஏன்?இது தவறான கருத்து. கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே சுவாமியை வழிபட வேண்டும். எம்.வரதராஜன், உத்தங்குடி, மதுரை.* நள்ளிரவு நேரத்தில் பூஜை நடத்தலாமா?பைரவர், காளி போன்ற உக்கிர தெய்வங்களுக்கு நள்ளிரவு நேரத்தில் பூஜை நடத்தலாம். சி.ராஜேந்திரன், பெதப்பம்பட்டி, திருப்பூர். * துாங்கும் குழந்தைக்கு திருநீறு பூசலாமா?ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கு மட்டும் துாங்கும் போது திருநீறு பூசலாம். எம்.தாமோதரன், திருத்தணி, திருவள்ளூர்.* கோயிலில் பரிகாரத்திற்காக பூஜை செய்த பிரசாதத்தை சாப்பிடலாமா?சுவாமியின் பிரசாதமாக இதனை நினைத்து சாப்பிடுங்கள். ஜி.பவானி, ராதாபுரம், திருநெல்வேலி.*திருஷ்டி பூசணியை எத்தனை நாளில் உடைக்கலாம்?முற்றிய காயை வாங்குங்கள். அது அழுகும் வரை உடைக்க வேண்டாம். கே.மோனிகா, கன்னிவாடி, திண்டுக்கல்.*கோயில்களில் பெரியவர்களைக் கண்டால் வணங்கலாமா?கோயிலில் தெய்வத்தை வணங்குவது போல பெரியவர்களையும் வணங்கலாம்.