மனப்பாடப் பகுதி
UPDATED : ஜன 20, 2015 | ADDED : ஜன 20, 2015
ஈசனார் சாத்தும் எழில் மலரைக் கால்சிதைத்தவாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனை செய்துஅல்லற் படுசாபந்தீர அருள் சுரந்தமல்லற் கருணை வளம் போற்றிபொருள்: இந்திரனின் யானையான ஐராவதம், அழகிய பூஜிக்கத் தகுந்த மலரை மதிக்காமல் காலில் இட்டு சிதைத்தது. அதன் காரணமாக பூலோகத்தில் பிறப்பெடுத்து அலைந்து திரிந்தது. மதுரையில் சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு தன் சாபம் தீரப் பெற்றது. சாபம் பெற்ற யானையின் துன்பம் போக்கிய பெருங்கருணை மிக்க சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.