உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்கமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.பொருள்: முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும். குறிப்பு: கச்சியப்பர் பாடியது.