சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* குளிக்காமல் கோயில்களுக்குச் செல்வதும், பிரசாதம் உண்பதும் கூடாது.* சூரிய உதய நேரத்தில் வீட்டு வாசல் மூடியிருக்கக் கூடாது. ஏனெனில் இது மகாலட்சுமி வீட்டுக்கு வரும் நேரம். * ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை கோயில் தரிசனம் செய்வதற்கு சமம்.* சுபநிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை கொடுக்கும் போது, அழைப்பவரோ, பெற்றுக்கொள்பவரோ தெற்கு நோக்கி நிற்பது கூடாது. * மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு கட்டுதல், பழுது பார்த்தல், குடி புகுதல் நடத்தக் கூடாது.* உப்பை அதிகமாகச் சேர்த்தால் உடலுக்குக் கேடு, உப்பு சேர்க்காவிட்டால் மூளைக்குக் கேடு.* கனவில் தாய், தந்தையர், குருநாதர், பெரியோர்களை தரிசித்தால் வாழ்வில் உயர்வு உண்டாகும். * சூரியன் மறையும் நேரத்தில் சனீஸ்வரரை தரிசித்தால் சகல நன்மைகளும் ஏற்படும்.* 144 பிரதோஷங்கள் இடைவிடாமல் சிவதரிசனம் செய்தால் மறுபிறவி இல்லாமல் போகும்.* கோபூஜையின் போது கன்று இல்லாமல் பசுவை மட்டும் பூஜிக்கக் கூடாது.