உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* செம்பருத்தி பூவை உலர வைத்து பொடிசெய்து உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.* செவ்வாய் கிழமையில் கடன் வாங்க கூடாது. அதே நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் நன்மை உண்டாகும். * தசமி, பவுர்ணமி திதிகள் கிரகப் பிரவேசத்திற்கு மிக சிறந்தவை.* தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் ஞானவஞ்சகன். * வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் (10:30 - 12:00 மணி) சரபேஸ்வரரை வழிபட திருமணம், குழந்தை பேறு கிடைக்கும்.* தேங்காயை தானம் செய்தால் பசுவைத் தானம் செய்த பலன் உண்டாகும். * கோயில் குளங்களில் உப்பைக் கரைத்தால் பாவம் அனைத்தும் கரைந்து போகும். * ஜாதகத்தில் குருபகவான் உச்சம், ஆட்சி பெற்று பலமாக இருந்தால் செய்வினை, பில்லி, சூனியம் நெருங்காது. * நல்ல செயல்களை செய்யும் போது அதை தடுப்பது பெரும் குற்றம். பொய் சாட்சி சொல்பவர் நரகத்திற்குச் செல்வர்.* 11,27,54 அல்லது 108 எண்ணிக்கையில் வெற்றிலைகள் கோர்த்த மாலையை செவ்வாயன்று விநாயகருக்கு சாத்த விருப்பம் நிறைவேறும்.