உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* தீபாவளி என்பதற்கு 'தீபங்களின் வரிசை' என்பது பொருள். * வாஸ்து சாஸ்திரப்படி தீபாவளியன்று நெய் விளக்கேற்றினால் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் அகலும். * வீட்டில் முதல் விளக்கை துளசி மாடத்தில் ஏற்ற வேண்டும். துளசி மாடம் இல்லாதவர்கள் பூஜை அறையில் ஏற்றலாம். * மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டின் ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் விளக்குகளை ஏற்றுவது சிறப்பு. * நோய் நீங்கி உடல்நலம் பெற விரும்புவோர் கிழக்கு நோக்கி கூடுதல் விளக்குகளை ஏற்றலாம். * நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி பித்தளை விளக்குக்கும், தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குக்கும் உண்டு.* நெய் விளக்கால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்ணெய் விளக்கால் மனநலம், உடல்நலம் பெருகும். * தீபாவளி நன்னாளில் மகாலட்சுமி, குபேரரை வழிபடுவோருக்கு பணத்திற்கு குறைவிருக்காது.