உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* அதிகாலையில் (3:00 - 5:59 மணி) தோன்றும் கனவுகள் விரைவில் பலன் தரும். மற்ற கனவுகள் பித்ரு தோஷத்தால் ஏற்படுபவை. அதற்கு பலன் இல்லை. * வீட்டின் உட்புறம் திறக்குமாறு கதவை அமைக்க வேண்டும். * துடைப்பத்தை பிறருக்கு தெரியாதவாறு வைக்க வேண்டும். * ஒரு வயது முடியும் வரை முகம் பார்க்கும் கண்ணாடியை குழந்தைக்கு காண்பிக்கக்கூடாது. * வீட்டு வாசலில் மஹாலட்சுமி படத்தை மாட்டும்போது, அவளது பார்வை வீட்டுக்குள் இருக்க வேண்டும். * திருமணம் நடக்கும் மேடையில் செருப்புக் காலுடன் ஏறக்கூடாது. * மரம், செடி, கொடி போன்றவற்றை வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கவோ, அந்த இடத்தில் இருக்கவோ கூடாது. * தானம், தர்மம் செய்யவும் யாகங்களில் பங்கேற்கவும் திருமணமானவருக்கு மட்டும் முழுபலன் கிடைக்கும்.