உள்ளூர் செய்திகள்

இந்த வார பிரசாதம்: கவலை தீர்க்கும் கந்தர்ப்பம்

முருகப்பெருமானுக்கு கந்தர்ப்பம் நைவேத்யம் செய்தால் மனக்கவலை தீரும்; மகிழ்ச்சி நிலைக்கும். என்ன தேவைபச்சரிசி - 400 கிராம்புழுங்கல் அரிசி - 100 கிராம்உளுந்தம் பருப்பு - 100 கிராம்வெந்தயம் - 1 ஸ்பூன்வெல்லம் - 400 கிராம்தேங்காய் - 1 மூடிஏலக்காய்த்துாள் - ½ ஸ்பூன்எண்ணெய் - ½ கிலோ செய்வது எப்படிஅரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஊறவைத்த அரிசியை அரைத்து நைசாக வந்ததும், வெல்லம் சேர்த்து அரைக்கவும். பிறகு மாவுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து அரைக்கவும். மாவை தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றவும். அது மேலே எழும்பி வந்தவுடன் மறுபுறம் திருப்பி பொன்னிறமானவுடன் எடுக்கவும்.