தோரண கணபதியே என் முன்னே தோன்றிடுக
கடன் பிரச்னையா கவலை வேண்டாம். கீழ்க்கண்ட பாடல்களை விநாயகர் முன் பாடுங்கள்.சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும் முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய் காரணனே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனேதோரண கணபதியே தோன்றிடுக என் கண்முன்னே.திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்கடன் பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவேஉடன் வந்தே உபாயங்கள் காட்டிவாய் கரிமுகவாய்பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்கருணைச் சொல் தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலேகரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக.மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதி சதுர்த்தியிலும்சேரும் இரவி காலத்திலும் மலர்துாவிப் படைத்திட்டோம்தோரணனே செவ்வேளின் மூத்தவனே செவி சாய்ப்பாய்.பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவாதோரணவாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரேசக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவேஎத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலேசந்திரன் ஒளி கரைத்துச் சரித்திரம் படைத்தது போல இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரேகுன்றத்துார் சக்தி பீடமதில் கடன் தீர்க் கணநாதனாய்க் கன்று முன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்.