உள்ளூர் செய்திகள்

வெற்றி உறுதி

செப்.11 நினைவுநாள்* மனதில் நம்பிக்கை இருந்தால் வெற்றி உறுதி. * அறிவும் துணிவும் சேர்ந்ததுதான் தைரியம். * போனதை நினைத்து வருந்தாதே. நடக்க இருப்பதை பற்றி யோசி. * மன்னிக்கும் தன்மை நல்லவர்களிடம் இருக்கும்.* புதிய முயற்சி செய்யும்போது தவறு வருவது இயல்பு. அதை திருத்திக்கொள். * நல்ல மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விட கொடுமையானது. * மனதை நல்வழிப்படுத்தும் சிறந்த வழியே கடவுள் வழிபாடு.* ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை லேசாக வைத்திரு. * உன்னை நீயே ஆட்சி செய்ய கற்றுக் கொண்டால் வாழ்வில் உயரலாம். * செல்வம் தேட பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.* பணத்தைப் போல நேரமும் விலை மதிப்பு கொண்டது. அதை வீணாக்காதே. * பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே சிறிய உண்மைகள் தெரியும். * உடலை உறுதியாக மாற்று. உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகும். * அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்தால் இன்பம் மறையும். * நீ யார் என்பதை உணர்ந்தால் உனக்கு நீயே நண்பன்தான். அழைக்கிறார் பாரதியார்