உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 4

வெற்றி அருளும் வீர கணபதிகுழந்தை, இளைஞர் ஆக இருந்த கணபதியே அடுத்ததாக, குமரப் பருவத்தில் இருப்பவராக, வீர கணபதி என காட்சி அளிக்கிறார். இத்தோற்றத்தில், அனைத்து முக்கிய தெய்வங்களின் ஆயுதங்களையும் கொண்டிருப்பார். எட்டுத் திசைகளையும் அவற்றிற்கு இடையேயுள்ள எட்டு இடைவெளிகளையும் வீர கணபதியின் 16 கைகள் குறிக்கின்றன.தியான சுலோகம்வேதாள சக்தி சர கார்முக சக்ர கட்க கட்வாங்க முத்கர கதாங்குஸ நாக பாசாந்!சூலஞ்ச குந்த பரசு த்வஜ முத்வஹந்தம் வீரம் கணேச மருணம் ஸததம் ஸ்மராமி!!அருணம் - சிவந்த நிறத் திருமேனிரும்ஸததம் - எப்போதும்வேதாள - வேதாளம் எனும் போர்ப்படை ஏவல் ஆயுதம்சக்தி - சக்தி எனும் ஆயுதம்சர - அம்புகார்முக - வில்சக்ர - சக்ராயுதம்கட்க - கத்திகட்வாங்க - கட்வாங்கம் எனும் ஆயுதம்முத்கர - இரும்பு உலக்கைகதா - கதை எனும் ஆயுதம்அங்குச - அங்குசம் எனும் ஆயுதம்நாக - படமெடுத்த நாகம்பாசாந் - பாசக் கயிறு ஆகியவைசூலம் - சூலாயுதம்குந்த - ஈட்டி எனும் வேல்கம்பு ஆயுதம்பரசு - கோடரித்வஜம்ச - கொடிஉத்வஹந்தம் - (ஆகிய 16 ஆயுதங்களைத் தனது 16 கைகளில்) தாங்கியிருப்பவரும்வீரம் - வீர கணபதி எனும் பெயர் உடையவரும் மஹாவீரருமானகணேசம் - கணேச்வரரைஸ்மராமி - மனதில் எண்ணி வணங்குகிறேன்வேதாளம்: வேதாளம் எனும் போர்ப்படை ஏவல் ஆயுதம்சக்தி ஆயுதம்: இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும். முருகனின் சிறப்பான ஆயுதம்வில், அம்பு: போர்க்களத்தின் பிரதான போர்க்கருவிகள்.சக்கரம்: விஷ்ணுவின் ஆயுதம், கூர்மை, செயல் நேர்த்தி இதன் உட்பொருள்.கட்கம்: நீண்ட கத்தியும் கைப்பிடியும் கொண்டது. ஞானவாள்.கட்வாங்கம்: காபாலிக சைவ சமயத்தின் அடையாளங்களில் ஒன்று. யோகி பயன்படுத்துவது.முத்கரம்: பூண் போட்ட இரும்பு உலக்கை; எதிரிகளை அடிக்க உதவுவது.கதாயுதம்: இது பிடிக்கும் தண்டமும் உருண்டையான முனைத்தலைப் பகுதியும் சேர்ந்த ஆயுதம்.நாகம்: ஒன்று முதல் ஏழு தலைகள் வரை இருக்கும். எதிரிகளை மயக்க வல்லது.பாசம்: கயிறு. உயிர்களைப் பிணைந்துள்ள மும்மலங்களையும் போக்குவது.சூலம்: சிவபெருமானின் ஆயுதம். படைத்தல், காத்தல், அழித்தலைக் குறிக்கும்.குந்தம்: ஈட்டி; கூர்மையான அறிவைக் குறிப்பது.பரசு: கோடரி, சிவபெருமானின் ஆயுதம். உயிர்களின் பாசங்களை அறுப்பது.கொடி: இறைவனின் பெருமையைக் காட்டுவது.பலன்: காரிய சித்தி, நினைத்த காரியம் கைகூடுதல், வழங்குகளில் வெற்றி கிட்டுதல், எதிரிகளை வெல்லுதல், நோய் நீக்கம் பெறுதல்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்