உள்ளூர் செய்திகள்

துன்பத்தில் இருந்து விடுதலை

* கடவுள் மீது பக்தி செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவாய். * பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும்.* பணியில் கவனம் செலுத்து. ஆனால் ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும். * யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச்செல்.* இன்ப, துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை. * மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே. * பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவு. * நெருக்கடி நேரத்திலும் விவேகமாக இரு. * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு. * நேர்மையான வழியில் கிடைக்கும் பணத்தை வைத்து தர்மம் செய். * எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு. * பெற்றோரின் அன்புக்கு இணையில்லை. கடவுளின் அன்பும் அது போலவே.சொல்கிறார் ஷீரடி சாய்பாபா