மனிதனாக பிறந்தது ஏன்
* எப்போதும் நற்பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித பிறவி நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.* நேர்மையும், உண்மையும் உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவார்.* கடவுள் ஒருவரே சிறந்த நண்பர். நம்மை எப்போது அடிக்க, அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்கறிவார்.* கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது. * எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்றுங்கள். ஆனால், பாராட்டுக்கு ஆசைப்படாமல் விழிப்புடன் இருங்கள். * பிடிக்காத ஒரு விஷயத்தைக் கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து, அதிலுள்ள உண்மையைக் கண்டுபிடியுங்கள்.* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.* வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும். விளக்குகிறார் அரவிந்தர்