மூலிகை முருகன்
UPDATED : ஜன 27, 2013 | ADDED : ஜன 27, 2013
பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவபாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. சுவாமி மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீக தீர்த்தமும் மருத்துவ குணம் கொண்டவை. இவர் கையில் உள்ள தண்டம் சக்திமிக்கதாக போற்றப்படுகிறது.