தண்ணீரை வழிபடுங்கள்
* உணவுக்குரிய தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தர உதவும் மண்ணும், தண்ணீரும் வழிபாட்டுக்கு உரியதாகிறது* தவறாத பிரார்த்தனையும், நம்பிக்கையான பக்தியும், கபடமில்லாத அன்புமயமான உள்ளமும் தான், வாழ்வில் அனைத்தையும் சாதிக்கச் செய்கிறது.* பாலைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் கடவுளை, அன்பின் மூலமாகப் பிடிக்க வேண்டும்.* கடவுளிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.* கடவுள் நமக்கு உடலையும், உள்ளத்தையும் கொடுத்தார். ஆனால், அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே புதிதாக எப்படி உருவாக்கிக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது.* எப்படியாவது மாற வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தால் போதாது. நமக்குள் சுயசோதனை செய்து, அதற்கு ஏற்ப ஒவ்வொரு எண்ணத்தையும், செயலையும் மாற்றி வந்தால் புதிய வாழ்வு மலரும்.- சின்மயானந்தர்