சாந்தம் நன்மை தரும்
* பணிவுடன் பழகாதவனும், நாணத்தகும் செயல்களில் இருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான்.* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.* பேராசை வறுமையைக் குறிக்கின்றது. அவாவின்மை செல்வத்தைக் குறிக்கின்றது.* எவன் சாந்த குணத்தைப் பெற்றிருக்கின்றானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். அறிவைத் தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேச வேண்டாம்.* எவருடைய சொல்லும் செயலும் பிறரைத் துன்புறுத்த மாட்டாவோ அவனே மனிதனாவான்.* வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.* தேவையான பொருளுதவி செய்து விதவைகளையும், ஏழைகளையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங்கொடையாளியாக இருக்கின்றான். - நபிகள் நாயகம்