உள்ளூர் செய்திகள்

அனைத்தையும் அறிந்தவன்

இறைவன் ஒருவனே என்பது பற்றிய சில தகவல்கள். * கிழக்கும் மேற்கும் அவனுக்கு உரியது. நீங்கள் எத்திசை நோக்கினாலும் அங்கே அவன் முகம் இருக்கிறது. * அவன் விசாலமானவன். கண்ணியமும் பெருமையும் கொண்ட அவன் முகம் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கும். * பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். * பெரிதாக இருக்கும் இந்த பூமி மறுமைநாளில் அவனது ஒரு கைப்பிடியில் இருக்கும். வானம் ஒரு காகிதம் போல் சுருட்டப்பட்டு அவனது வலது கையில் இருக்கும். * மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடம் உள்ளன. நிலம், நீரில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். * பூமியின் ஆழத்தில், இருளில் புதைந்திருக்கும் விதை பசுமையானதும், உலர்ந்ததுமான கடுகிலும் சிறியதும் கூட அவனுடைய பதிவேட்டில் உள்ளது. * நரகவாசிகள் நரகத்தில் சிறைப்படுவார்கள். அங்கு வயிறு நிரம்பாத காரணத்தால் 'இன்னும் அதிகம் இருக்கிறதா' எனக் கேட்கும். இறுதியில் அவன் தன் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும். போதும்' என்று கூறும்.