எண்ணம் போல் வாழ்க்கை
* எண்ணத்தின்படியே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. * உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் மடடுமே உடல் சீராக இயங்கும். அதுதான் இதயம். * பிறர் மீது கோபம் கொண்டால் ஆயுள் குறையும்.* சாப்பிட்டதும் உணவு கொடுத்தவருக்கு நன்றி கூறுங்கள். * அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். * ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள்.* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலது கையை பயன்படுத்துங்கள்.* சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டினால் உங்களுக்கு அன்பும் அருளும் கிடைக்கும். * செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். ஏனெனில் சொர்க்கத்தில் உள்ள பிராணிகளில் ஆடுகளும் உள்ளன.* நம்பிக்கைகளில் மிக மேன்மையானது இறைவனைத் தவிர மேலானவன் இல்லை என ஏற்பதாகும். * உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே மூழ்கடித்து விட்டுப்பின்னர் வெளியில் எடுக்கவும். ஏனெனில் அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது.