அன்புடன் வாழ்வோம்!
UPDATED : ஆக 20, 2013 | ADDED : ஆக 20, 2013
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்!* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட உங்களில் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது, இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ, அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.* அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதை அற்றவன்.* தருமம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.- நபிகள் நாயகம்