உள்ளூர் செய்திகள்

நன்றிக்கடன் செலுத்துங்கள்

* குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்.* எவரேனும் ஒருவர் சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்.* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பது பேராசையே. பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை.* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன்.* பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமை.* ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர்.- நபிகள் நாயகம்