உயிர்களை நேசியுங்கள்
UPDATED : ஜூலை 12, 2015 | ADDED : ஜூலை 12, 2015
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்காவது தர்மம் செய்ய வேண்டும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள்.* அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள்.* சத்தான எளிய உணவை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாதீர்கள்.* எந்த நிலையிலும் உண்மை பேசுங்கள். இனிமையும், எளிமையும் பேச்சில் நிறைந்திருக்கட்டும்.* கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படியுங்கள்.-சிவானந்தர்இன்று சிவானந்தர் நினைவு தினம்