உள்ளூர் செய்திகள்

இனிய உண்மை பேசுங்கள்

* கண்கள் நல்லதையே பார்க்கட்டும். காதுகள் நல்லவிஷயங்களையே கேட்கட்டும். மனம் நல்லதையே சிந்தித்திருக்கட்டும்.* ஆன்மிக வாழ்விற்கு அடக்கம் மிக அவசியம். மன அடக்கம் நிறைந்தவன் இருக்குமிடம் ஞானிகள் வாழும் தபோவனமாகிவிடும். * தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.* எந்நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதிலும் இனிமை கலந்திருக்கட்டும். * மென்மையான உணவை அளவோடு உண்டால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். சாப்பிடும்போது மவுனமாக இருங்கள். தினமும் இரண்டு மணிநேரமாவது மவுனத்தைக் கடைபிடியுங்கள்.* பணிவு, மனத்தூய்மை, பக்தி இருக்குமானால் கடவுளின் தரிசனத்தை நிச்சயம் பெற முடியும்.* செய்யும் தவறுகளை சிந்தித்து திருத்திக் கொள்ள முயலுங்கள். பிறர் மீது குற்றம் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள விரும்பாதீர்கள்.- சிவானந்தர்