உள்ளூர் செய்திகள்

வேலையில் கவனம் தேவை

* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றை மறந்து மன்னிப்பதுடன், மக்களுடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.* தேவைகளைக் குறைப்பதுடன் உடைமைகளையும் குறைக்க வேண்டும். எளிய வாழ்க்கையையும், உயரிய சிந்தனையையும் பெற்றுவிளங்குங்கள்.* கணக்கற்ற தத்துவ ஞானத்தைவிட, சிறிய பயிற்சி எவ்வளவோ சிறந்தது. அன்றாட வாழ்வில் யோகம், சமயம் மற்றும் தத்துவத்தைக் கடைப்பிடித்து ஆன்ம ஞானத்தை அடையுங்கள்.* ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவிகிதத்தை தானம் செய்வதுடன், நம்மிடம் உள்ளதை பிறருடன் பகிர்ந்து கொண்டால் உலகமே ஒரே குடும்பமாக மாறும். * மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர், தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நம் கவனத்தை எவரும் வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில் உங்களை கவனிப்பது அவர் தான் என்பதை மறக்கக்கூடாது.-சிவானந்தர்