உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / படத்துக்கு விளம்பரம் தான்!

படத்துக்கு விளம்பரம் தான்!

கவுண்டம்பாளையம் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரஞ்சித், தன் படக் குழுவினருடன் கோவை, கோனியம்மன் கோவிலில், தரிசனம் செய்தார்.அப்போது கூறுகையில், 'சுயமரியாதை திருமணம் என சொல்லி, எவ்வளவு கொடுமைகள் திருநெல்வேலியில் நடந்துள்ளன. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கோபம் வரும். சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள், முதலில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்து, மற்ற பெண்களுக்கு பின்னர் செய்து வைக்கட்டும்.'பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது என, சட்டம் கொண்டு வர வேண்டும். நாடக காதலை பற்றி பேசினால் என்னை ஜாதி வெறியனாக பார்க்கின்றனர். இதற்காக என்னை எதிர்த்தால், நான் ஜாதி வெறியன் தான்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஜூலை முதல் வாரம் இவரது படம் ரிலீஸ் ஆக போகுது... இந்த நேரத்துல ஆவேசமா பேசினால் தானே படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

selva kppk
ஜூன் 27, 2024 07:32

உன்னை போன்ற ஜாதி வெறியர்கள் இருக்கும் வரை நாடு முன்னேறாது.


TRUE INDIAN
ஜூன் 27, 2024 17:21

சாதியை அழிக்கணும்னா முதல்ல கொட்டாவ ஒழிக்கணும், தில் இருந்தா பேசி பாருங்க....


Ashok Subramaniam
ஜூன் 27, 2024 00:29

அதென்ன மூத்த நிருபரின் முணுமுணுப்பு திராவிடக் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிந்துள்ளார் ரஞ்சித்.. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனுமின்றி வாய்ச்சொல் வீரராயுள்ள வீணான அரசியல்வாதிகளுக்கும், பாசாங்கான போராளி நடிகர்களுக்கும் முட்டுக் கொடுத்து தூக்கிவிடும் முதுகெலும்பில்லா மூத்த பத்திரிக்கையாளர் வேறென்ன சொல்வார்.. திராவிடக் கட்சியைச் சார்ந்தோ அல்லது அவர்களுக்கு காசுக்கு முட்டுக்கொடுக்கும் மற்ற கட்சிகளைச் சார்ந்தோ இருப்பவர்கள்தாமே அவர்கள்...? நீங்கள் எப்படியோ?


புதிய வீடியோ