உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அதே ஸ்ருதியில் பாடுறாங்க!

அதே ஸ்ருதியில் பாடுறாங்க!

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார்.இதில், வட்டார வாரியாக விவசாயிகள், தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளில் சிலர், 'வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை வளமாக்க வந்த பஞ்சாப் சிங்கமே... பால் வடியும் முகம் கொண்டவரே... எங்கள் துயர் நீக்க வந்தவரே...' என, எதுகை, மோனையில் கலெக்டருக்கு, 'ஐஸ்' வைத்தனர்.இதை கேட்டு ரசித்த கலெக்டர் சிரித்தவாறு,'விவசாயிகளின் மனுக்களை பரிசீலனை செய்து முடியும், முடியாது என, தெளிவாக அதிகாரிகள் கூற வேண்டும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இந்த மாதிரி ஐஸ் எல்லாம்அரசியல்வாதிகளுக்கு தானே வைப்பாங்க...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'ஒருவேளை மாவட்ட அமைச்சரை பார்த்துட்டு, நேரா கலெக்டரை பார்க்க வந்துட்டாங்க போல... அதான், அதே ஸ்ருதியில்பாடுறாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 21, 2024 16:49

தமிழன் விவசாயத்தை முற்றும் அழித்து பிளாட் பிரித்துக் காசாக்கத் தான் முன்வருவான்


Dharmavaan
ஆக 21, 2024 09:56

ராமநாதபுரத்தை வளமாக்கிய சர்தார்ஜி புத்தி தமிழனுக்கு ஏன் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை