எறும்பு விடும் வாசனை!
சாரை சாரையாகச் செல்லும் எறும்புகளில் சில, அவ்வப்போது நின்று நிதானித்து விட்டு, மீண்டும் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தத் தாமதம் எதற்காக? இவை இப்படித் தயங்கி மயங்கி நிற்கும்போது, மிக நுண்ணியதொரு வாசனையை விட்டுச் செல்கின்றன. பின்னால் வரும் எறும்புகள் இந்த வாசனையைப் பிடித்துக் கொண்டு, முன்னேறி தங்கள் கூடுகளை அடைகின்றன.