உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

கொலம்பஸ் தன் பயணத்தின் போது, மேற்கிந்தியத் தீவில் தங்க நேரிட்டது. அங்கிருந்த மக்களில் சிலர், உடனே அந்த இடத்தை விட்டுப் போகா விட்டால் அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினர்.அதற்கு கொலம்பஸ், ''சூரியனையும், சந்திரனையும் கொல்லும் சக்தி எனக்கு உண்டு. என்னிடம் யார் சண்டைக்கு வருவது? வேண்டுமானால் பாருங்கள். இன்றிரவு நான் சந்திரனை அழிக்கிறேன்,'' என்று சவால் விட்டார். அதன்படி மாலையில் சிறிது நேரம் தோன்றிய சந்திரன் சிறிது சிறிதாக மறைந்து விட்டதைக் கண்ட அப்பிரதேச வாசிகள் பயந்து போய், கொலம்பஸின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். அவர்களுக்குச் சந்திர கிரகணம் பற்றித் தெரியாது. ஆனால், அன்றைக்கு கிரகணம் என்று கொலம்பஸுக்கு முன்கூட்டியே தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !