உள்ளூர் செய்திகள்

அப்பா.. அம்மாம் பெரிய கட்டிடம்!

ஒரு தெருவையே ஒரு கட்டடம் ஆக்ரமித்துள்ளது. அவ்ளோ பெரிய பங்களா கூட இப்ப உண்டா என கேட்கிறீர்களா?கல்கத்தாவின், 'க்யு வீன்ஸ் வே' சாலை யில் உள்ள, 'விக்டோரியா மெமோரியல் ஹால்தான் அது. 1921ம் ஆண்டிலிருந்து இது இயங்கி வருகிறது.இங்கு பிரிட்டீஷாரின் 200 வருட ஆட்சியின் பிரபலங்களை இங்கு காணலாம். உண்மையில் இது ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஆர்ட் கேலரியாகும்! கடந்த ஆண்டு 35 லட்சம் பார்வையாளர் கள் இதற்கு விஜயம் செய்தனர். இந்த விக்டோரியா மெமோரியல் ஹாலின் முன் மிக அழகான தோட்டம் உள்ளது. இது 64 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை பராமரிக்க 21 தோட்டக்காரர்கள் உள்ளனர். இதனுள் விக்டோரியாவின் வெங்கல சிலை உள்ளது. மற்றும் பலரது சிலைகள் உள்ளன.விக்டோரியா மெமோரியல் ஹாலின் உயரம் 184 அடி. இது 1819-1901ம் ஆண்டுகளுக்கு இடையே ஆட்சி செய்த ராணி விக்டோரியாவுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.1906ல் அஸ்திவாரம்; மன்னர் ஜார்ஜ் -5 அவர்களால் போடப்பட்டது.1912ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டாலும், திடீரென மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றினார்.இதனால் 1921ம் ஆண்டு தான் துவக்கப் பட்டது. முழுவதும் சலவைக்கற்களால் ஆனது. இதற்கு நுழைவுக்கட்டணம் 10 ரூபாய். வெளியில் உள்ள தோட்டத்தை பார்க்க 4 ரூபாய்.உள்ளே பிரிட்டிஷ் அரசின் 200 வருட இந்திய சரித்திரத்தை காணலாம். பாரம்பரிய நினைவுப் பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், ஆயுதங்கள், கவசங்கள், அபூர்வ புத்தகங்கள், ஓரளவு கலைமதிப்புடைய ஆபரணங்கள் என பலவற்றை இங்கு காணலாம்.இங்கு ராணி விக்டோரியா பயிற்சி எடுத்த பியானோ உள்ளது.இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 'தீமில்' அருங்காட்சியகத்தில் மாற்றங் களை செய்து; பார்வையாளர் களை ஈர்க்கின்றனர்.இந்தியாவிலேயே, ஒரு அருங்காட்சியகத்திற்கு அதிக கூட்டம் வருவது இங்குதான். இதற்கு அடுத்து ஹைதராபாத் சப்தர்ஜாய் அருங்காட்சியகம். இதற்கு கடந்த வருடம் 12 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். விக்டோரியா மெமோரியல் ஹால் கட்டு வதற்கு 1912 வாக்கில் ஆன செலவு 1.05 கோடி ரூபாய்!பார்வையாளர் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !