உள்ளூர் செய்திகள்

335 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம், இயேசு கிறிஸ்து பிறந்த, 335 ஆண்டுகளுக்கு பின் துவங்கியது* இந்திய பொருங்கடலில், 'கிறிஸ்துமஸ் தீவு...' ஒன்று உள்ளது. இதை, வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி, 1643ல், கிறிஸ்துமஸ் தினத்தன்று கண்டுபிடித்ததால் இப்பெயர் வந்தது* உலக நாடுகள் எல்லாவற்றிலும், 'சாண்டாகிளாஸ்' - கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால், ஜப்பானில் மட்டும், 'கிறிஸ்துமஸ் பாட்டி' என்றழைக்கப்படுகிறார். தாத்தாவை விட பாட்டியிடம், அன்பும், உரிமையும் அதிகம் என்பதால், அங்குள்ள குழந்தைகளுக்கு, பாட்டியிடமிருந்து, கிறிஸ்துமஸ் பரிசுகளும் கூடுதலாகவே கிடைக்கும்* முதல் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தவர், புனித அசிசி பிரான்சிஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !