உள்ளூர் செய்திகள்

சபதம் போட்ட த்ருப்தி தேசாய்!

'தடையை மீறி, சபரிமலை கோவிலுக்கு போவேன்; 41 நாட்கள் விரதமிருந்து மலையேறுவேன்...' என்று சபதம் போட்டார், த்ருப்தி தேசாய். யார் இந்த பெண்? மகாராஷ்டிராவில் உள்ள சனிசிங்காநாவூர் கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு இருந்த தடையை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற, 'பூமாதா பிரிகேட்' அமைப்பின் தலைவி தான் இவர்!'சபரிமலை கோவிலுக்குள் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை; இது, சட்டத்துக்கு புறம்பானது. பெண்கள் என்றால், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்ற பழங்கால சம்பிரதாயங்களை தகர்ப்பதற்காக, சபரிமலை கோவிலுக்கு போவேன்...' என்று அறிக்கை விடுத்துள்ளார். பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது பற்றிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !