உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

துணிந்து நில்!என்னடா வாழ்க்கைஎன்பதற்காக அல்ல வாழ்க்கை...எதிர்நீச்சல் போட்டுநிமிர்ந்து நிற்பதற்கே வாழ்க்கை!ஆயிரம் சவால்கள்அடுக்கடுக்காய் வந்தாலும்,துவண்டு போகாமல்துணிந்து நிற்பவனேகைதட்டல் பெறுகிறான்!சோதனை மேகங்கள்சூழ்கொள்ளும் போதுகவலை சிறைக்குள்கைதியாக நிற்காமல்சிந்தனை வெளிச்சத்தில்தஞ்சம் புகுபவனேசிகரம் தொடுகிறான்!மனித சக்தியின்மகத்துவம் உணர்ந்துமுடிவில்லா முயற்சியில்மூழ்கி வியர்ப்பவனுக்குவானம் கைதட்டும்மின்னல் மாலையிடும்மழை வாழ்த்தெழுதும்!அறியாமையும், அலட்சியமும்துன்ப விருட்சத்தின் வேர்கள்!அகந்தையும், சோம்பலும்வளர்ச்சியை அழிக்கும்விஷச் செடிகள்!ஒவ்வொரு காலையும்உழைப்பை சுவாசித்துலட்சிய வேள்வியைநொடிதோறும் நிகழ்த்து!சூழ்ச்சியும், சூழ்நிலையும்தகர்ந்துவிடும் ஓசையில்வாழ்நாள் வரலாறு ஆகும்!நண்பர்களுக்கு மட்டுமல்ல...எதிரிகளுக்கும்உன் வாழ்க்கைபாட நூலாகட்டும்!— கவிதாசன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !