உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனக்குமுறல்!மலரென்றும் மதியென்றும்மயக்க வேண்டாம்மதிக்காமல் பெண்ணைமிதித்து நசுக்கவும் வேண்டாம்!கற்புக்கரசி என்றுகற்சிலை வேண்டாம்கணவருக்கடிமையெனசாஸ்திரமும் கொள்ள வேண்டாம்!கங்கை, காவிரி என்றுபெயரிட வேண்டாம்கருவறையிலேயே அவளுக்குகல்லறையும் கட்ட வேண்டாம்!புனித பொருளாகவும்எண்ண வேண்டாம்போகப் பொருளாகவும்கருத வேண்டாம்!பெண்ணை பெண்ணெனமட்டும் மதித்திடுவீர்இது பெண்ணீயம்அல்ல தோழரே...ஒரு பெண்மையின்வேண்டுகோள்!கலைப் பொருளாய் பாவிக்கும்பார்வை போக்கிவடிவத்தை வடித்திடும்கவிதை நீக்கி - அவளைஅவளாகவே பார்த்திடு!சீதையை தீயிட்டுக்கொளுத்தவும் வேண்டாம்கண்ணகிக்கு தீயிடும்அதிகாரமும் வேண்டாம்!பெண்ணடிமை இல்லையெனில்பெண் விடுதலை வேண்டாம்பயமுறுத்தல் இல்லையெனில்பாதுகாப்பும் தேவையில்லை!பெண்ணுரிமை கொடுக்கப்படவேண்டியதல்லமறுக்கப்படக் கூடாதது!— எம். மங்கையர்க்கரசி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !