கவிதைச்சோலை!
காதலிக்காதீர்கள்!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைதினம் தினம் ரத்தக்கறையுடன்பயணிக்கும்ரயிலின் சக்கரங்கள்சொல்கின்றன!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைவிஷ மருந்துகளால்நரம்புகளை அறுத்துதுடித்து கதறும்இதயம் சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைஅடுக்குமாடிகளில் நின்றபடிபூமி அதிர கீழே தள்ளும்உயர்ந்த கட்டடங்கள்சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைதகுதியில்லையென நிராகரித்துகுடிகாரனாக்கும்மது சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைவிழிகள் பிதுங்ககால்கள் துடிக்ககழுத்து இறுக்ககொடூரமாய் கொல்லும்மரணக் கயிறுகள்சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைஎதிர்த்து நின்று வாழ பலமின்றிஓடி ஒளிந்து கொள்ளும்முகவரியில்லாத காதல்சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைவன்முறை எனும் ஆயுதம் ஏந்திபழி தீர்க்க மறித்து நிற்கும்உருவமேயில்லாதஜாதி சொல்கிறது!— அ.கென்னடி, லால்குடி.