உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தோழி!தொலைந்து போய் இருப்பேன்தோழி உன் தோழமை மட்டும்எனக்கு கிடைக்காதிருந்தால்!விட்டில் பூச்சியாக விளக்கையேசுற்றிக் கொண்டிருந்த எனக்குவிடியலை காட்டியதே உன்உண்மையான நட்பு தானே!பாலைவன பயணமாகவேஇருந்த என் வாழ்க்கையின்பாதையில் நிழல் தரும்சோலையாக நீ நின்றுஇளைப்பாற வைத்தாய்!என்றுமே தோல்வி தான்எனக்கு நிரந்தர முகவரிஎன்று தான் நினைத்திருந்தேன்...ஆனால், இன்று உன்னால்வெற்றி கூட என் விலாசம்கேட்டு வருகிறதே!தோல்வியை கண்டு துவண்டநேரத்திலெல்லாம் தோழியாய்நின்று தோள் கொடுத்தாய்இன்று, அந்த வானம் கூடஎனக்கு வசப்படும் துாரத்தில்!அன்று, முயற்சியில்லாமல் முடங்கிக்கிடந்தவனை தட்டியெழுப்பிவெற்றி காண வைத்ததுஉன் ஊக்குவிப்பும் உரிமையானநட்பும் தான்!என் தோல்விகளுக்காக அதிகம்வருத்தப்பட்டதும் நீதான்...வெற்றியை கண்டு சந்தோஷப்படுவதும்நீ தானே தோழி!நண்பனின் துணையிருந்தால்சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடி வரலாம் என்றனர்...ஆனால், இங்கே தோழிஉன் நட்பு, சாமானியனையும்சாதனை படைக்க வைத்துவிட்டது அல்லவா!நல்ல நட்புக்கு என்றுமேகாதலுக்கும், காமத்துக்கும்இடமில்லை என்பதை நிரூபித்தாய்இன்னொரு பிறவி என்றிருந்தால்அதிலேயும் நீயே என் தோழியாய்வந்து விடு - நானும் உன்துணையோடு வென்றிடுவேன்இந்த ஜகத்தினையே!எஸ்.கே.ராமசாமி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !