உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தவிர்ப்பதா, தக்க வைப்பதா?ஏன், எதற்கு?என்றெண்ணிசந்தேகம் கேட்பதையும்பதில் கூறுவதையும்ஆசிரியரிடம் தவிர்த்தேன்பள்ளிப் பருவங்களில்!பிற்காலத்தில்திருப்பித் தர வேண்டுமோஎன்ற ஐயத்தில்தவிர்த்தேன்அம்மாவின் அன்பையும்ஆதரவையும்!நமக்கிது உதவாதுஎன்றைக்குமேயென்றுதவிர்த்தேன்அப்பாவின் அறிவுரைகளையும்அனுபவங்களையும்!நல் நண்பர்களிடம்பழகிப் பொழுது கழிப்பதைமனம் விட்டுப் பேசுவதைத்தவிர்த்தேன்நம் ரகசியம்காக்கப்பட வேண்டுமென்று!நான் மட்டுமேவளர வேண்டுமெனநெருங்கி வர விடாமல்தவிர்த்தேன்நல் உறவுகளை!நிரந்தர ஆரோக்கியம்இதுதானென்றுகடின உழைப்பையும்கடமைகளையும்தவிர்த்தேன்அலுவலகத்தில்!தவிர்த்துவிட்டதெல்லாம்புத்திசாலித்தனம்என்றெண்ணிவேகமாக பயணித்தபோது...தோல்விகள் ஒவ்வொன்றும்புரிய வைத்ததுதவிர்த்தது எல்லாம்நான்தக்க வைத்துக் கொள்ளவேண்டியவையென்று!வா. முகிலன், கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !