கவிதைச்சோலை!
முதுமை... முற்றுப்புள்ளி அல்லவாழ்க்கைஒரு பயணம் அல்லபடைப்புசொற்ப சிலருக்குஅது சிறுகதைபெரும்பாலோருக்கோபெருங்கதை எனும் நெடுங்கதை!சர்ப்ரைஸ்களும், சஸ்பென்ஸ்களும்நிறைந்தது முதுமைஅது முற்றுப்புள்ளி அல்லநீளத் தொடரும்அந்திம அத்தியாயம்!வாசிக்கும் அவசரத்தில்கடைசி அத்தியாய ரகசியத்தைக்கண்டறியத் தவிப்பதுஜோசியம் பார்க்கும் ஜோலி!வாழ்க்கைப் புதினத்தைஎழுதும் படைப்பாளிபாரபட்சம் பாராதவன்!இளமையின் ஆட்டங்களுக்குமுதுமையில் ஈவு கொடுக்கிறான்முதுமையின் முகப்பொலிவுமுகச்சுருக்கம் அல்லவாழ்ந்த வாழ்க்கையின்கதைச் சுருக்கம்!முதுமைமாற்றத்தை சொல்ல வரும்கதைக் கரு!அதுஉறவின் மாற்றத்தையும்உடலின் மாற்றத்தையும்ஒரு சேர உணர்த்தும்ரகசிய குறியீடு!முதுமைமுற்றுப்புள்ளியல்லபடிப்பவன் உணரபடைக்கப்படும் காற்புள்ளி!படைத்தவன்கற்றுக்கொள்ளாத பாடத்தைபடிப்பவன் கற்றுக்கொள்கிறான்இந்த புதினத்தின் புத்திமதிபக்கம் புரட்டினால் புரியாதுவரிக்கு வரிவிஷயங்கள் உள்ளடக்கியவேதம் போல!நெருங்கிய நெஞ்சங்களுக்கேநினைவில் பதியும்ஞானம் பொழியும்!வளர்கவி, கோவை.