உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - வெற்றிச் சூத்திரங்கள்!

வாழ்க்கையென்பது தோல்வியாளர்களுக்கு ஆயிரம் வாசல் அரண்மனை இலக்குகள் புரிவதற்குள் வாழ்க்கை தொலைந்து விடுகிறது! வெற்றியாளர்களுக்கோ ஒரே வாசல் கொண்ட கர்ப்பகிரகம்இலக்குகள் தெளிவாக வாழ்க்கையும் எளிதாக! எல்லாவற்றையும் நம்புவதென்பதுமாலுமியில்லாத கப்பல் போலஊர் போய் சேராது!எதையுமே நம்பாமல் இருப்பதோகரையிலேயே ஒதுங்கியிருக்கிற கப்பல் போலஊரைக் கூட தாண்டாது! முட்களால் தான்பாதையென்றாலும் நடக்க தயங்க மாட்டான்வெற்றியாளன்! மலர்களாலேயே பாதையென்றாலும் துணைக்கு ஆள் தேடுவான் தோல்வியாளன்!வாழ்க்கை வெற்றியாளர்களுக்கு தலையாட்டி பொம்மைதோல்வியாளர்களுக்கோஉடைந்துபோகும் கண்ணாடி பொம்மை! வாழ்ந்தது வானவில் மாதிரி தற்காலிகமாய் இருந்தாலும் பூமிக்கு வந்து போனது ராமர் வில் மாதிரி நிலைத்திருக்க வேண்டாமா! பொக்கைவாய் குழந்தை பொய்ப் பல் மாட்டிக்கொள்கிற மாதிரி தோல்விகள் உனக்கு செயற்கையானவைவெற்றி உனது இயற்கைஇயல்பாய் இருவெற்றியே நீ!— கஜலட்சுமி முருகானந்தன், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !