கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!
முட்களாக குத்தும் விஷமிக்க வார்த்தைகள்வலிமையான இதயத்தையும்வலிக்கச் செய்யும்!கள்ள கபடமில்லாமல் சிரித்து பழகும்உயர்ந்த குணம்உள்ளத்தில் இல்லையென்றாலும் மனங்களை ரணமாக்காமல் சிந்தித்து பேச வேண்டும்! * நெஞ்சை உலுக்கும் நஞ்சு பேச்சுகள் பிஞ்சு உள்ளத்தையும் புரட்டி போடும் என்பதால்நயமான வார்த்தைகள் நரம்பில்லாத நாக்கிலிருந்து புறப்பட வேண்டும்!* சமுதாயத்திற்கு ஒத்துவராதசபிக்கப்பட்ட வார்த்தைகளைசபை நடுவில் பேசும்போது சங்கடங்கள் முளைத்து சந்தி சிரிக்க வைத்துவிடும்!* சொந்த பந்தங்கள்மனம்விட்டு பேசுமிடத்தில் விஷமத்தனத்தை சொருகி உறவை விரிசலாக்கி அப்பளம் போல நட்பைநொறுங்க செய்ய வேண்டாம்! * சகிக்க முடியாத வார்த்தைகளை சம்பந்தமே இல்லாத இடத்தில் சரியென நினைத்துஉளறி கொட்டும் போது வெறுப்பை நாமாக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்!* உயர்ந்த சிந்தனைகள் உறவுகளை பிரிப்பதில்லைஉதிர்ந்துபோன நட்புகள் லட்சியத்தை தொடுவதில்லை!- எல்.மூர்த்தி, கோவை.