உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!

* சும்மா கிடைத்து விடவில்லைஇந்த சுதந்திரம்பசி துாக்கம் மறந்துஇரவு பகல் போராடிபெற்ற சுதந்திரம்!* மண் குடித்த ரத்தத்தைவிண் படித்ததோவீணாய் போகவில்லைகடவுளின்கண் திறந்தது!* பாரதியின் வீரப்பாட்டில்அண்ணலின் அகிம்சை வழியில் கிடைத்தசுதந்திரம் பேணி காப்போம்!* அன்று வெளியேறியதுவெள்ளையர்கள்இன்னும் உள்ளே இருப்பதுகொள்ளையர்கள்களைகளை களைவோம்!* பொருளாதார தரத்தில்அந்நிய முதலீட்டைதடை செய்வோம்சொந்த நாட்டைமுன்னேற செய்வோம்!* வேலை வாய்ப்பைபெருக்குவோம்பாலை நிலங்களையும்சோலைவனமாய்மாற்றுவோம்!* மாசற்ற மனிதர்களாய்வாழ்ந்து காட்டிபெற்ற சுதந்தரத்தின்சரித்திரங்களைமறவாமல் பயணிப்போம்!* நிலத்தை நீரைவிவசாயத்தை உழைப்போரைகாத்திடுவோம் சுதந்திரத்தின் பலனை பெற்றிடுவோம்!- சங்கீதா சுரேஷ், தருமபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !