கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!
* முயற்சியின் தொடக்கம் தோல்வி என்றால் விடாமுயற்சியின் முடிவு வெற்றியின் ஆரம்பம்!* பயமும் தயக்கமும்நம்மிடம் இல்லை என்றால் செயலும் பாதையும் ஒரே நேர்க்கோட்டில் செல்லும்!* ஊக்கமும் திறமையும்உள்ளத்தில் வேரானால் சாதிக்கும் சக்திகள்ஆல விருட்சமாக வளரும்!* நிதானமும் எளிமையும் இரு கண்களானால் என்னாளும் வாழ்க்கை சிக்கலாக மாறாது!* எதிர்கால லட்சியத்தைவலுவாக முயற்சி செய் அதை செய்து முடிக்கும் மனஉறுதி தானே வரும்!* சிந்தித்து செயல்படும் ஆற்றலை உறுதி செய் அதுவே மிகச் சிறந்த வெற்றியின் நம்பிக்கை!* பொறுமையும் மவுனமும் பகைமை வீழும் ஆயுதம்தேவையான நேரங்களில் கடைபிடிக்க முயற்சி செய்!* தோல்வி நிரந்தரமல்ல காரணத்தை தேடாதே வெற்றியின் காரணிகள் கண்டறிய முயற்சி செய்!* உயர்வு மூச்சு என்றால்இலக்கை சுவாசம் செய்அஞ்சாமை தடம் பதித்துஆற்றும் திறன் பதிவிடு!* சில படிப்பினைகள் உள்ளத்தில் வலி தரலாம்அதை வலிமையோடு அனுபவமாக மாற்றிவிடு!—வி.சுவாமிநாதன், சென்னை.மொபைல் எண் : 93603 83220