உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: எதுவும் நம் கையில்!

இருள் என்பது இயற்கையே... அதில் ஒளியேற்றுவது நம் கையில்! தவறுகள் நடப்பது இயல்பே... தண்டிப்பதும், மன்னிப்பதும் நம் கையில்! சாதி மத கொடிகளை உயர்த்தி பிடிப்பதை மாற்றி சமத்துவ கொடியினை ஏந்த வேண்டும் நம் கையில்! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையை நடைபாதையாய் மாற்றுவது நம் கையில்! கரடு முரடாய் காணப்படும் கல்லை சிலையாய் வடிப்பது நம் கையில்! கடல் அலைகள் சீறுவது இயற்கையே... கடலை கடக்க கட்டுமரம் செய்வது நம் கையில்! விண்ணில் பறக்கும் பட்டங்கள்... அதை பறக்க விடும் நுாலானது நம் கையில்! சிகரம் தொட எண்ணுவது இயல்பே... அதை செயலாற்றி வெற்றி காண்பது நம் கையில்! - ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல். தொடர்புக்கு : 8675014239


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !