உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வரம் பெற்ற தலைவன்!

ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள்!படிக்காமல் மேதையாக முடியும் என உலகறிய வைத்த தலைவன்! ஊருக்கு உழைத்து உறவுகளை வளர்த்த தலைவன்! வியர்வை சிந்தி உழைத்தாலும் விளம்பரம் தேடாத தலைவன்! வேண்டுதல்களை கேட்டு ஆகட்டும் பார்க்கலாம் என அனுசரணை தந்த தலைவன்! படிக்க வா சாப்பாடு தருகிறேன் என பசியாற்றி கல்வி தந்த தலைவன்! வாழ்ந்த நாளில் பிறர் வாழ உழைத்த உத்தம தலைவன்! நாடும் மக்களுமே சொந்தம் என சொத்துகள் சேர்க்காத சொக்க தங்க தலைவன்! இத்தனையும் ஒருங்கே பெற்ற தலைவன் யாரென்றால் காமராஜர் என நினைவுக்கு வருவதே - அந்த தலைவன் பெற்ற வரம்! - அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு: 9976679612


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.C. Krishnarathnam
ஜூலை 12, 2026 09:35

"வியர்வை சிந்தி உழைத்தாலும் விளம்பரம் தேடாத தலைவன்" என்றது அருமையான வைர வரிகள்... கவிதை எழுதியவருக்கும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட வாரமலர் ஆசிரியர் குழுவினருக்கும் பாராட்டுகள்