அந்துமணி பதில்கள்!
க. கதிரேசன், சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டு அளிப்பதில், மிகவும் குழப்பமாக உள்ளது. சிறந்த கட்சி மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது எப்படி?ஊழல் இல்லாத கட்சி என்று மக்களால் எது போற்றப்படுகிறதோ, அந்தக் கட்சிக்கே ஓட்டளியுங்கள். இதில் குழப்பமே வேண்டாம்!* ஆர். நாகராஜ், மதுரை: ஒரு பத்திரிகைக்கு, வாசகர் என்பவர் யார்? பணம் கொடுத்து பத்திரிகை வாங்கி படிப்பவர்களா அல்லது டீ கடை, நுாலகம் போன்ற இடங்களில் இலவசமாக படிப்பவர்களா?எங்கு படித்தாலும், வாசகர்களே, பத்திரிகைகளின் முதலாளிகள்! ஆர். ரவி, திருப்பூர்: என் நண்பன், பசிக்காத போதும் எதையாவது தின்கிறானே...தனக்குத் தானே சவக்குழி பறித்துக் கொள்கிறார் என்பதே அர்த்தம்! ஜெ. குமார், கன்னியாகுமரி: நான் விரும்புவதை எல்லாம் வாங்கக் கூடாது என்கிறாளே, என் மனைவி... இது சரிதானா?சரி தான்! உங்களுக்கு எது தேவையோ, அதை மட்டுமே வாங்குங்கள். உங்கள் மனைவி, அதிபுத்திசாலி என்பதில் சந்தேகமில்லை!* எஸ். சரவணன், மதுரை: நான் நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?நிறைய சம்பாதிக்க அறிவு வேண்டும்; சம்பாதித்ததை சேமிக்கவும், புத்தி வேண்டும்; சேமித்ததை சரியான முறையில் செலவழிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். செய்வீர்கள் தானே! க. வினாயகம், நெல்லை: அன்பர்கள், நண்பர்கள், தோழர்கள் என்பவர்கள் யார்?அன்பர்கள், கை குலுக்குவர்; நண்பர்கள், கை கொடுப்பர்; தோழர்கள், தோளில் ஏற்றி துாக்கி விடுவர். இவர்களில் எந்த வகை என்பதை, நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!எம். லதா, செங்கல்பட்டு: தலைக்கனம் என்றால் என்ன?தலைக்கனம் இரண்டு வகைப்படும்... முதல் வகை, தன்னைப் பெரிதாக நினைத்துக் கொள்வது; அடுத்த வகை, பிறரைத் தாழ்வாக நினைப்பது. இரண்டு வகைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை!