உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!

சலசலத்து ஓடிய ஆறுசாக்கடையாய் சீரழிந்ததுசீராய் பெருகியிருந்த சிறு மணலும்சில்லரைக்கு விலை போனது!வானத்திற்கே விசிறிகளாய்விரிந்திருந்த வரிசை மரங்கள்வெட்டப்பட்ட நெடுஞ் சாலைகளில்வெப்பம் ஒன்றே மிச்சம் உள்ளது!புழுதியில் ஆடியதும், பனியில் நனைந்ததும்புல்லில் நடந்ததும், பூக்களுடன் பேசியதும்பழங்கதையாய் புதைய, தினம் முளைக்கும்புதுக் கல் மரங்களே கண்ணில் பதிகிறது!நதியைக் கொன்றதால்காசுக்கு நீர் என ஆனதுநச்சுப் புகை பரப்பியதால்நல்ல காற்றும் காசு ஆகிறதுநல்ல வளங்களுடன் நாம் நடந்து வந்த பூமிநம் வாரிசுக்கு இல்லை என ஆனது!இன்னல் பல பட்டதால் இயற்கையின்இனிய முகம் மாறி, சினத்தின் அலைகளால்இன்னுயிர் பல சுருட்டிக் காட்டி விட்டாள் - கடலில்இதயம் சிதறிக் குமுறுகிறாள் பூமியில்!இதமாய் இயங்கிய நிலமின்றிஇறப்பைத் தழுவும் உழவன்இற்று விட்ட வேராய் இருண்டு விட்டஇன்றைய உலகம்...இத்தனையும் பார்த்த பின்னும்இழப்பின் விளிம்பை எட்டிய பின்னும்இதுவே நேரம் என விழிக்காமல்இன்னுமா நீ உறங்குகிறாய்?—யசோதா சுப்ரமணியன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !