கவிதைச்சோலை - தவப்புதல்வன் யார்?
மே 12 - அன்னையர் தினம்எந்த சபையிலாவதுஎந்த தருணத்திலாவதுஅவளைப் பற்றிஓரிரு வார்த்தைஉயர்வாக பேசியிருக்கலாம்!அன்பு, தயை, இரக்கம் என அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவளை'கோவில், தெய்வம், குலசாமி' எனகோடிட்டுக் காட்டியிருக்கலாம்!சுடு சோறுசமைத்து பரிமாறியவளைவார்த்தைகளால் சுடாமல்வாஞ்சையோடு நடந்திருக்கலாம்!சூரிய ஒளி படாமல்சுருண்டு கிடந்தவளைஎழுப்பி அமர வைக்கஎன்றேனும் உதவியிருக்கலாம்!வயது முதிர்வால்வாயருகே கொண்டு சென்றசோற்றுப் பருக்கைசிந்தியதைக் கண்டுசீற்றம் கொள்ளாமல் இருந்திருக்கலாம்!பற்று கொண்டுபேரன், பேத்திகளை கொஞ்சியவளைதொற்றுப் பரவுமெனதனி அறையில் விடாமல்தவிர்த்திருக்கலாம்!முடியாமல் படுத்துக் கிடந்தவளின்மல, ஜலங்களை அப்புறப்படுத்திபடுக்கை விரிப்பை மாற்றிபணி செய்திருக்கலாம்!ஒருமுறையேனும் அவள்தலை சாய்க்கதன் மடியைதந்து உதவியிருக்கலாம்!உயிர் பிரியும் தறுவாயில்உடனிருந்துதுளசித் தண்ணீர் ஒரு தேக்கரண்டி தந்திருக்கலாம்!'அடுத்த பிறவியிலும் நீயேஅன்னையாகவாய்க்க வேண்டும் தாயே...' என,வாய் விட்டுக் கதறியிருக்கலாம்!'இத்தகைய கடமைகளில்ஏதேனும் சிலவற்றையாவதுஏக மனதாக நிறைவேற்றினீர்களா?'என்ற கேள்விக்கு'ஆம்' என, பதிலளிப்பவர் எவரோஅவரே தெய்வத்திருத் தாயின்அருளாசி பெற்ற தவப்புதல்வன்!— பி.சரவணன், சென்னை.