உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

* பிரிஜ்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில், ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி, கட்டியானவுடன் குழந்தைகளுக்கு, ஜூசுடன் கலந்து கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பர். * பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது, இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா, தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும். * சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும். *    தயிர் வடைக்கு, உளுந்தம் பருப்புடன், ஆறு முந்திரி பருப்பை சேர்த்து ஊற வைத்து அரைக்கவும். இந்த மாவில் வடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். * ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும். * அடை மாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால், ருசியாக மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !