கீரை வகைகளை சமைக்கும்போது...
* முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும்போது, கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால், கட்டியாக இல்லாமல் கீரை உதிரியாக இருக்கும்* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து, அதை தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்* கீரை மசியல் செய்யும்போது புளிக்கு பதிலாக, பொடியாக அரிந்த மாங்காயைச் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்* கொத்துமல்லித் தழையை, பச்சையாகவே துவையல் அரைக்கும்போது, புளி சேர்ப்பதற்குப் பதிலாக, ஒரு துண்டு மாங்காயை சேர்த்து அரைத்தால், சுவையும், மணமும் அதிகமாகும்* கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான், சத்து அதிகமாக இருக்கும்* கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்து பொடியாக்கி வைத்து, குழம்பு, ரசம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம்; சுவையாக இருக்கும்.தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்